×
பயமும் பதற்றமும் நிறைந்த வாழ்க்கையில் சமாதானத்தை கண்டுபிடிப்பது எப்படி?| Bayamum Padhatramum nirantha valkaiyil samathanathai kandupidipathu eppadi? | 09 Feb 2025 | Rev. B. Samuel | Praise AG Church | Kolathur

Youtube Link

https://www.youtube.com/watch?v=nBgGtWs_0Tc


வேதபகுதி: லூக்கா8:22-25

ஆரோக்கியமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வது எப்படி? தொடர்ச்சி……

தலைப்பு: பயமும் பதற்றமும் நிறைந்த வாழ்க்கையில் சமாதானத்தை கண்டுபிடிப்பது எப்படி?

பயம் பதற்றம் இருப்பதற்கான அறிகுறிகள்:

      அமைதியில்லாமல் இருத்தல்.

      கவனம் செலுத்துவதில் குறைவு.

      தசை பதற்றம்.

      தூக்கமின்மை.

இவைகளை மேற்கொள்வது எப்படி?

1.            பயம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்.

  2தீமோத்தேயு1:7ல் தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல் பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.

             ஒருநாளும் தேவன் பயத்தையும் பதற்றத்தையும் தருவதில்லை.

             பயத்தை கொடுப்பது பிசாசு.

             தேவனுடைய வார்த்தையை நம்புவதிலிருந்து திசைதிருப்புவதற்காக பிசாசு கொடுக்கிற நூதனமான திட்டம்.

             ஆண்டவரை எல்லா சூழ்நிலைகளிலும் நம்புவதற்கு பழக வேண்டும்.

             நாம் தேவனுடைய வார்த்தையை சரியாகக் கவனித்தால் பயம் நமக்குள் வராது.

2.            தேவனுடைய வார்த்தை, மாத்திரமே நிரந்தரம்.

   ஏசாயா41:10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்.

   “பிரச்சனையின் மீது நம்முடைய கவனத்தைக் குவித்தால் பயம் அதிகமாகும்.

   தேவன் மீது நம்முடைய கவனத்தைக் குவித்தால் நம்பிக்கை (விசுவாசம்) அதிகமாகும்.”

   சங்கீதம்121:4,5ல், இதோ இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. கர்த்தர் உன்னைக் காக்கிறவர்.

ஆண்டவர் எல்லா சூழ்நிலைகளின்மீதும் அதிகாரம் கொண்டவர். தம்முடைய பார்வைக்கு நலமான காரியத்தை செய்து முடிப்பார்.

3.            உங்களுடைய பயத்தையெல்லாம் ஜெபமாக மாற்றி விடுங்கள்.

   1பேதுரு5:7ல், அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள்.

4.            தேவனுடைய வார்த்தையினால் இருதயத்தை நிரப்பி விடுங்கள்.

  2தீமோத்தேயு1:7

  ஏசாயா41:10,13,14

  யோவேல்2:21

  ஏசாயா43:1

  மாற்கு5:36

  சங்கீதம்56:3

  சங்கீதம்27:1

  லூக்கா1:13   

       இந்த வசனங்களை தினமும் ஒரு நாளுக்கு 10 முறை வாசியுங்கள். இந்த வசனங்களை தியானித்து பாடல்களாக பாடுங்கள். இப்படி செய்யும் போது பயமும் பதற்றமும் நம்மைவிட்டு நீங்கும். ஆமென்.






Related Post

Blog Categories

Related Posts

×

Notice!!

Praise A.G. Church Welcomes you. Explore our Ministry and lets build the kingdom of God